பிரான்ஸில் மீண்டும் தேசிய முடக்கம் பிரதமர் தெரிவிப்பு!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று, ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளதாக பிரதமர் jean castex தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேலும் 21 பகுதிகள் இப்போது சிவப்பு மண்டலங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அது முன்னதாக இரண்டாக இருந்தது.
அவர் மேலும் கூறுகையில், ‘தொற்றுநோய் அதிகரித்து வருகிறது. இப்போது நாம் தலையிட வேண்டிய நேரம் இது. பிரான்ஸ் வேகமாக செயற்படவில்லை என்றால் பரவல் அதிவேகமாக மாறக்கூடும்.
இந்த பரவல் முதன்மையாக இளைஞர்களிடையே இருந்தாலும், மருத்துவமனையில் சேர்க்கை படிப்படியாக வாரத்திற்கு 800ஆக உயர்கிறது. பரிமாற்ற வீதம் இப்போது 1.4 ஆக உள்ளது மற்றும் வைரஸ் நாடு முழுவதும் பரவி வருகிறது’ என கூறினார்.
மேலும், சுகாதார அமைச்சகம் உள்ளூர் அல்லது தேசிய முடக்கநிலைக்கான திட்டங்களை வகுத்து வருவதாகக் தெரிவித்தார்.
