மகன் நாமல் சிறைக்குள்: அநுராதபுரத்தில் களமிறங்கும் தந்தை மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுர பேரணியில் கலந்துகொள்ளவுள்ளதாக அக்கட்சியின் செயல்பாட்டுப் பணிப்பாளர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ச இல்லாத குறையை தீர்க்கும் வகையில் மகிந்த ராஜபக்ச அனுராதபுரத்திற்கு வருகை தரவுள்ளதாக அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்யும் மக்கள் பேரணி எதிர்வரும் 12 ஆம் திகதி நிச்சயமாக நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், மஹிந்த ராஜபக்ச உரையாற்றுவதற்காக பிரதான மேடையில் ஏறாமல், மேடைக்கு முன்னால் உள்ள மக்கள் மத்தியில் அல்லது வேறு ஒரு மேடையில் அமர்ந்து பேரணியில் இணைந்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ மேலும் குறிப்பிட்டார்.

You must be logged in to post a comment.