World

மீண்டும் உலக சந்தையில் உயர்ந்த கச்சா எண்ணெயின் விலை

மத்திய கிழக்கில் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஒரு பரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை $89.63 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அமெரிக்க WTI கச்சா எண்ணெயின் விலையும் $83.91 ஆக உயர்ந்துள்ளது.

மீண்டும் உலக சந்தையில் உயர்ந்த கச்சா எண்ணெயின் விலை | Global Crude Oil Prices On The Rise Again

ஹோர்முஸ் நீரிணை திறப்பில் உள்ள இழுபறி, மற்றும் செங்கடல் பகுதியில் சவுதியின் எண்ணெய் கப்பல்கள் மீதான ஹவுதிகளின் தாக்குதல் காரணமாக எரிபொருள் விநியோக வழிகள் சீரின்மை காரணமாகவே இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading