முதலமைச்சராகத் துடிக்கும் விஜய்க்கு புதிய சிக்கல்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் புதிய சட்டச் சிக்கல்களை எதரிகொண்டு வருவதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது .
ஒருபுறம் முதலமைச்சராக பதவியேற்கும் கனவில் இருக்கும் விஜய்க்கு, 2015-ம் ஆண்டு தொடரப்பட்ட வருமான வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கு தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
விஜய்க்கு எதிரான வரி ஏய்ப்பு மற்றும் நிதி முறைகேடு
விஜய்க்கு எதிரான வரி ஏய்ப்பு மற்றும் நிதி முறைகேடு முறைப்பாடுகளை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, இந்த மனுவைப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு விஜய்யின் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 2 கோடி ரொக்கம் மற்றும் ரூ. 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.
மீண்டும் உயிர் பெற்றுள்ள வழக்கு
இருப்பினும், “தனது வருமானம் மற்றும் சொத்து விவரங்களைத் துல்லியமாக அதிகாரிகளிடம் சமர்ப்பித்துவிட்டதாக” விஜய் அப்போதே விளக்கம் அளித்திருந்தார்.

தற்போது இந்த வழக்கு மீண்டும் உயிர் பெற்றுள்ளது அவரது அரசியல் பயணத்தில் ஒரு சவாலாகப் பார்க்கப்படுகிறது.
அரசியல் வெற்றி ஒருபுறம் இருந்தாலும், பழைய வருமான வரி வழக்குகள் மற்றும் முறைகேடு புகார்கள் விஜய்யின் முதலமைச்சர் பதவியேற்புப் படலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது வரும் நாட்களில் தெரியவரும் என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

You must be logged in to post a comment.