Local

முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த திட்டம்?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்து ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர குறிப்பிடுகின்றார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தங்களின் வாக்குப் பங்கைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், பிரிவினைவாதிகள் மற்றும் பல்வேறு கும்பல் குழுக்களை ஜனாதிபதி ஏற்கனவே சமாதானப்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது போன்ற பிரிவினைவாத நலன்களை அமுல்படுத்துவதாகவும் உறுதியளித்து வருவதாகவும், இதற்கு தனது சர்வதேச எஜமானர்களின் ஆதரவைப் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் தேர்தல் வரைபடத்தை சுருங்க அனுமதிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading