முன்னாள் ஜனாதிபதிக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி அவர் நாட்டில் அமுல்படுத்திய இராணுவச் சட்டம் தோல்வியில் முடிவடைந்தது. அந்த இராணுவச் சட்டத்தை நியாயப்படுத்துவதற்கான ஒரு போலிச் சூழலை உருவாக்கும் நோக்கில், வட கொரிய வான்பரப்புக்குள் இராணுவ ஆளில்லா விமானங்களை ஊடுருவச் செய்ய அவர் உத்தரவிட்டிருந்தார்.
இந்தச் சட்டவிரோத ஊடுருவல் உத்தரவு தொடர்பான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதை அடுத்தே, முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு இந்த மிகக் கடுமையான 30 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.