Local

வடிவேல் சுரேஷ் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்!

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போது ஆதரவாக வாக்களித்ததால் பசறை தொகுதி ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதன்படி வெற்றிடமான பசறை தொகுதி அமைப்பாளராக மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணித் தலைவர் லெட்சுமணன் சஞ்சய்க்கு வழங்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து உரிய நியமனக் கடிதத்தை சஞ்சய் பெற்றுக்கொண்டதுடன், அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், குறித்த பதவிக்கு தாம் நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைவதாகவும், பசறை இளைஞர்களுக்கு சேவையாற்றுவேன் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading