வட கடலில் எண்ணெய் டேங்கர், சரக்குக் கப்பல் மோதல்! 32 பேர் உயிரிழப்பு
வட கடலில் எண்ணெய் டேங்கர் மற்றும் சரக்குக் கப்பல் மோதலை தொடர்ந்து தீவிர மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வட கடலில் இன்று காலை எண்ணெய் டேங்கர் மற்றும் சரக்குக் கப்பல் ஒன்று மோதியதில், இரு கப்பல்களிலும் தீப்பிடித்துள்ளது.

போர்த்துகீசிய கொடி ஏந்திய சோலாங்(Solong) என்ற கொள்கலன் கப்பலும்,(container ship) அமெரிக்க கொடி ஏந்திய ஸ்டெனா இம்மாகுலேட்(Stena Immaculate) என்ற டேங்கர் கப்பலும் இந்த விபத்தில் ஈடுபட்டுள்ளன.
இங்கிலாந்தின் HM கடலோர காவல்படை (HM Coastguard) உடனடியாக மீட்பு பணிகளைத் தொடங்கியுள்ளது.
ராயல் தேசிய லைஃப் போட் நிறுவனம் (RNLI) தகவலின்படி, கப்பல்கள் மோதிய வேகத்தில் பல நபர்கள் கப்பல்களில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.
🚨 Tanker and Cargo Ship Collide in the North Sea
A massive fire erupted after fuel spilled and ignited following a collision off the coast of Yorkshire, UK. Rescue boats and a helicopter have been deployed, while firefighting vessels are en route.
The Stena Immaculate tanker… pic.twitter.com/v0XOEdN1S0
— NEXTA (@nexta_tv) March 10, 2025
ஹம்பர்சைடில் இருந்து கடலோர காவல் படை மீட்பு ஹெலிகாப்டர், ஸ்கெக்னஸ், பிரிட்லிங்டன், மேபிள் தோர்ப் மற்றும் கிளீதோர்ப்ஸ் ஆகிய இடங்களில் இருந்து லைஃப் போட்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

You must be logged in to post a comment.