Local

வரியை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை நிதி அமைச்சர்!

நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால், தற்போது நாட்டின் விற்பனை வரியை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என நிதியமைச்சர் அலி சப்ரி BBC க்கு கூறியுள்ளார்.

BBCக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், அலி சப்ரி, 2019 ஆம் ஆண்டில் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) விகிதத்தை 8% ஆக பாதியாகக் குறைத்தபோது அரசாங்கம் தவறு செய்ததாக ஒப்புக்கொண்டார்.

தினசரி அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அடுத்த எட்டு மாதங்களில் தேசத்திற்கு $4bn (£3.2bn) தேவைப்படுகிறது. “வரிகளை அதிகரிக்க வேண்டும். எங்களிடம் உள்ள வருவாய் மற்றும் செலவின இடைவெளியைக் குறைக்க வழிவகை செய்ய வேண்டும்,” என்றார்.

அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியை நம்பியிருக்கும் இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு தற்போதைய VAT நிலை “நிச்சயமாக நிலையானது அல்ல” என்று கூறிய அவர், விகிதம் 13% அல்லது 14% ஆக உயர்த்தப்பட வேண்டும் என்றார்.

கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் 2019 இல் வரிகளை குறைக்கும் நடவடிக்கை தவறானது என்பதை ஒப்புக்கொண்ட அவர், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட அரசாங்கம் நீண்ட நாள் காத்திருந்துள்ளதாகவும் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading