வரி தொடர்பான அனைத்து தகவல்களும் இன்று வெளியீடு: 900 வங்கிக் கணக்குகள் முடக்கம்
வரி தொடர்பான அனைத்து தகவல்களும் இன்று திங்கட்கிழமை (26) வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் நிலுவை வரிகளை வசூலித்து அரச வருமானத்தை அதிகரிக்கச் செயற்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
வரி நிலுவையை வசூலிப்பதற்காக சுமார் 900 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், வரி நிலுவையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று திங்கட்கிழமை (26) வரி தொடர்பான அனைத்து தகவல்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

You must be logged in to post a comment.