World

வல்லரசு நாடுகளின் புலனாய்வு தலைவர்கள் ரகசிய சந்திப்பு!

உலக வல்லரசு நாடுகளின் புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களுக்கு இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த வார இறுதியில் சிங்கப்பூர் அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த ஷங்ரி-லா பேச்சு பாதுகாப்பு கூட்டத்துடன் இணைந்து இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

வல்லரசு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அவ்ரில் ஹெய்ன்ஸ், இந்தியா புலனாய்வு அமைப்பின் தலைவர் சமந்த் கோயல் ஆகியோர் கலந்து கொண்ட இந்த ரகசிய கலந்துரையாடலில் சீனாவும் பங்கேற்றதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

“சர்வதேச நிழல் நிகழ்ச்சி நிரலில் இந்த சந்திப்பு ஒரு முக்கியமான அங்கமாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ஷங்ரி-லா உரையாடலில் கலந்து கொள்ளும்போது, “உளவுத்துறை நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் உட்பட பங்கேற்பாளர்கள் தங்கள் சகாக்களை சந்திக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என்றார்.

சிங்கப்பூரில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த சந்திப்பு குறித்து எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்துள்ளது. கருத்துக்கான கோரிக்கைகளுக்கு சீன மற்றும் இந்திய அரசாங்கங்கள் உடனடியாக பதிலளிக்கவில்லை.

ரஷ்ய பிரதிநிதிகள் யாரும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், உக்ரைனின் துணை பாதுகாப்பு மந்திரி வோலோடிமர் வி. ஹவ்ரிலோவ், ஷங்ரி-லா உரையாடலில் கலந்துகொண்டதாகவும், ஆனால் உளவுத்துறை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading