Jobs

வெளிநாட்டு உயர் கல்வி தொடர்பான இலவச கருத்தரங்கும் கண்காட்சியும்

 

வெளிநாட்டு உயர் கல்வி தொடர்பாக விரும்பும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கும் கண்காட்சியும் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

வௌிநாட்டு பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளின் பங்கு பற்றலுடன் உயர் கல்வி முறையை மையமாகக் கொண்ட விசேட குழுவினர்களால் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.

குறித்த இலவச கருத்தரங்கில் இலங்கையில் உள்ள முன்னணி பல்கலைக்கழங்கள் பங்குகொள்வதுடன், மாணவர்களுக்கு 25 முதல் 50 வீதமான புலமைப்பரிசில்களை வழங்கவுள்ளனர்.

இந்த நிகழ்வானது வெளிநாட்டில் கிடைக்கும் பரந்த கல்வி வாய்ப்புக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவர்களின் உயர்கல்வி பயணத்தைத் தொடர்ந்து மாணவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உங்களுடைய தகைமை மற்றும் பெறுபேறுகளுடன் கருத்தரங்கிற்கு வருகை தாருங்கள். பங்கு கொள்ளும் மாணவர்களுக்கு இலவச பங்குபற்றல் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

ஏற்பாடு *Hybrid International Campus & Hybrid Visa Centre*
எதிர்வரும் 01ஆம் திகதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரையில் வௌ்ளவத்தையில் உள்ள ஹொட்டல் சபையர் (Hotel Sapphire) நடைபெறும்.

இணையதள முகவரி hybridcampus.lk

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading