2 எண்ணெய் கப்பல்களை அதிரடியாக தாக்கி அழித்தது ஈரான்!
ஈராக் கடல் பகுதியில் இரண்டு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் பாரிய தாக்குதல் நடத்தியுள்ளது.
எரிசக்தி விநியோகம் மீதான தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்கு இலக்கான கப்பல்கள் இரண்டும் கொழுந்துவிட்டு எரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் தாக்குதல்
குறித்த கப்பல்களில் இருந்த 25 தொழிலாளர்களை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளதுடன், ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக கடுமையாக முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தாக்குதலுக்கு, வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற ஈரானின் சிறிய படகுகளில் பயன்படுத்தப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

You must be logged in to post a comment.