World

300 ஆண்டுகளாக கதவுகளே இல்லாத இந்திய கிராமம்…!!!

பொதுவாகவே வீட்டை விட்டு வெளியேறுகின்றோம் என்றால் வீட்டை சரியாக பூட்டியிருக்கின்றோமா என சரிப்பார்க்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். காரணம் திருடர்கள் பற்றிய பயம் தான்.

உலகில் எல்லா இடங்களிலும் திருட்டு நடக்கும். திருடர்கள் இல்லாத இடம் இருக்கிறதா என்றால் அது மிகவும் அரிது.இன்னும் சொல்லப்போனால் அப்படிப்பட்ட இடம் சொர்க்க பூமி என்று தான் சொல்ல வேண்டும்.

300 ஆண்டுகளாக கதவுகளே இல்லாத இந்திய கிராமம் பற்றி தெரியுமா? இங்கு திருட்டே நடக்காதாம்! | Mystery Behind No Doors In This Village In India

உலகில் சவுதி அரேபியா போன்ற ஒரு சில நாடுகளில் சிறிய தவறுகளுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படுவதால், இது போன்ற நாடுகளில் திருட்டு சம்பங்கள் நடப்பது சற்று குறைவு தான். ஆனால் இங்கும் கதவுகள் இருக்கின்றன.

ஆனால் திருடர்களே இல்லாத ஒரு ஊர் இந்தியாவிலேயே இருக்கின்றது என்றால் உங்களால் நம்முடிகின்றதா?

300 ஆண்டுகளாக கதவுகளே இல்லாத இந்திய கிராமம் பற்றி தெரியுமா? இங்கு திருட்டே நடக்காதாம்! | Mystery Behind No Doors In This Village In India

இங்கு கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த கட்டிடத்துக்கும்  கதவுகளே இல்லையாம். அப்படிப்பட ஊர் எங்கிருக்கின்றது என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

கதவுகளே அற்ற கிராம்

மகாராஷ்டிராவில் உள்ள சனி சிக்னாப்பூர். என்று அழைக்கப்படும் ஒரு கிராமத்தில் தான் இந்த நடைமுறை பின்பற்றப்படுகின்றது.

இந்த கிராமத்தில் உள்ள வீடுகள், அலுவலகம், கோவில், மண்டபம், ஏன் வங்கிகளுக்கு கூட கதவுகள் கிடையாதாம். அந்த விசித்திர நடைமுறை ஏன் பின்பற்றப்படுகின்றது என்ற கேள்வி இப்போது நிச்சயம் எழுந்திருக்கும்.

300 ஆண்டுகளாக கதவுகளே இல்லாத இந்திய கிராமம் பற்றி தெரியுமா? இங்கு திருட்டே நடக்காதாம்! | Mystery Behind No Doors In This Village In India

காரணம் இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள், கடவுள் சார்ந்தும் பக்தி சார்ந்தும் இயங்கிவருகின்றமை அனைவரும் அறிந்தது தான். அப்படி, முழுக்க முழுக்க பக்தி மற்றும் ஆன்மிகம் சார்ந்து இயங்கும் ஒரு கிராமம் தான் சனி சிக்னாப்பூர்.

இந்த இடத்தின் சிறப்பு என்னவென்றால் இங்கு  திருட்டு என்பதே கிடையாதாம். மகாராஷ்டிரா மாநிலம், நய்வாசா வட்டத்தில் அமைந்துள்ள இந்த  சனி சிக்னாப்பூரில் சனி பகவானுக்கு ஒரு கருங்கல்லால் ஆன சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

300 ஆண்டுகளாக கதவுகளே இல்லாத இந்திய கிராமம் பற்றி தெரியுமா? இங்கு திருட்டே நடக்காதாம்! | Mystery Behind No Doors In This Village In India

இவர், நம் கிராமத்தை காப்பாற்றுவார் என்கிற நம்பிக்கையில் இங்கு எந்த வீடுகளுக்கும் கதவுகளே இல்லையாம்.

ஷீரடி சாய்பாபா கோவிலில் இருந்து சுமார் 60-65 கி.மீ தொலைவில் அமைந்துள்ள குறித்த கோயில், ஜாக்ருத் தேவஸ்தானம் என குறிப்பிடப்படுகின்றது. அதாவது, இந்த கிராம வாசிகள் அதனை உயிருள்ள கோயில் என்கின்றனர்.

இதன் வரலாற்று பின்னணியை ஆய்வு செய்கின்ற போது, பல ஆண்டுகளுக்கு முன்பு, கிராமத்தில் வெள்ளம் வந்த போது கருப்பு நிற பாறை ஒன்று, கரை ஒதுங்கியுள்ளது. ஒரு ஆடு மேய்ப்பவர் இதை தாண்டி குதித்த போது இந்த சிலையில் இருந்து ரத்தம் வந்ததாக கிராம வாசிகள் குறிப்பிடுகின்றனர்.

300 ஆண்டுகளாக கதவுகளே இல்லாத இந்திய கிராமம் பற்றி தெரியுமா? இங்கு திருட்டே நடக்காதாம்! | Mystery Behind No Doors In This Village In India

அன்று இரவு அந்த ஆடு மேய்ப்பவனின் கனவில் வந்த சனி பகவான், தான் இங்கு சுயம்பாக வீற்றிருப்பதாகவும் தனக்கு கூரை இல்லாத திறந்த வெளியில் கோயில் அமைக்குமாறும் கூறியிருக்கிறார்.

அதனை தொடர்ந்து,  தடையில்லாமல் சனி பகவான் ஊரை காவல் காக்க வேண்டும் என்பதால் தான் இங்கு  எந்த கட்டிடத்துக்கும்  கதவுகளே இல்லையாம் அது மட்டும் கிடையாது, இங்கிருக்கும் கழிவறைகளுக்கு கூட கதவுகள் இல்லையாம்.வெறும் திரைகளால் தான் மறைக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading