FeaturesWorld

4 இரட்டை குழந்தைகள் பெற்ற தாய் வியந்துபோன மருத்துவர்கள்!

பெண் ஒருவர் கருவுற்று ஒரு பிரசவத்தில் நான்கு இரட்டை குழந்தைகளை பெற்றுள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஆஷ்லே நெஸ் Ashley Ness என்ற பெண் ஒருவருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு வளர்ப்பு மகன்களும் உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, நான்கு முறை அடுத்தடுத்து கருவுற்ற அந்த பெண் கருச்சிதைவு ஏற்பட்டதால் குழந்தை பெற முடியாமல் போயுள்ளது.

இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த அவர், அப்போது தான் செம்ம அதிர்ஷ்டம் ஒன்று அடித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு பின் கர்ப்பம் அடைந்த அவர், ஒரே பிரசவத்தில், நான்கு குழந்தைகளை பெற்றுள்ளார்.

கோடியில் ஒருத்தருக்கு தான் நிகழும்
எதிர்பார்க்கப்பட்ட 12 வாரங்கள் முன்பாகவே இந்த நான்கு குழந்தைகளை பெற்றுள்ளார். இதில் என்ன ஆச்சரியம் என்றால், நான்கு குழந்தைகளில் மொத்தம் இரண்டு இரட்டையர்கள் இருந்தது தான்.

ஏனென்றால், இரண்டு இரட்டை குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு பிறப்பது என்பது, ஒரு கோடியில் ஒருவருக்கே நிகழும் அதிசயமாம்.

இதுகுறித்து, ஆஷ்லே நெஸ் தெரிவிக்கையில், “நான் நினைத்ததை விட வேகமாக குழந்தைகள் இந்த பூமிக்கு என்ட்ரி கொடுத்துள்ளனர். இதை நான் மிகவும் அற்புதமாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபற்றி மகப்பேறு மருத்துவர் ஒருவர் கூறுகையில், Ashley Ness-ற்கு நடந்தது மிகவும் ஆபத்தான கர்ப்பம் என்றும், தனது 30 ஆண்டுகால மருத்துவ பணியில் இப்படி கேள்விப்பட்டது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, ஒரு கோடி பெண்களில், ஒருவர் மட்டுமே இரண்டு இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுப்பார்கள் என்ற நிலையில், Ashley-க்கு நடந்துள்ளது, நெட்டிசன்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading