Local

ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் நடக்க வேண்டும்! – அமைச்சர் சம்பிக்க வலியுறுத்து

“தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைகின்றது. எனவே, இவ்வருட இறுதி மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல்தான் நடத்தப்பட வேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தினார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

“நாடாளுமன்றத் தேர்தல் இப்போதைக்கு அவசியமில்லை. ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தலாம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“எனினும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினர் எந்தத் தேர்தலையும் சந்திக்கத் தயாராகவுள்ளனர். வேட்பாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்” எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading