Local

சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படி உயிர் தப்பினேன்? – சஹ்ரானின் மனைவி விபரிப்பு

சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தௌஹீத் ஜமா அத்தின் தலைவரும் தற்கொலைதாரியுமான சஹ்ரான் ஹாசீமின் மனைவி சாதியா.

அதேசமயம் விசாரணையாளர்களிடம் சஹ்ரான் மற்றும் அவரது செயற்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ள சாதியா, அவருடன் பழகிய நண்பர்கள் பற்றி தெரிவித்திருப்பதுடன் மற்றும் அவர் இப்படியான தாக்குதலுக்கு ஏன் அவசரப்பட்டார் என்பது குறித்து அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.

சஹ்ரானுடன் பழகிய அரசியல்வாதிகள் யார் என்பது குறித்தும் சாதியாவிடம் விசாரிக்கப்பட்டதாக சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்தன.

சாய்ந்தமருதில் குண்டுவெடிப்பில் உயிர் தப்பியது எவ்வாறு என்பது குறித்து அவரிடம் விசாரித்த பொலிஸ், சாதியா இறுதியாக பாவித்த தொலைபேசி விபரங்களையும் ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading