Local

இயற்கை சீற்றத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு! – நூற்றுக்கணக்கான வீடுகளுக்கும் சேதம்

அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக 466 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 186 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்  என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


16 வீடுகள் முழுமையாகவும் ஆயிரத்து 427 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர்.


சீரற்றகாலநிலையால் நாடு முழுவதிலும் 5 ஆயிரத்து 675 குடும்பங்களைச் சேர்த்த 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென் மற்றும் வடமேல்மாகாணங்களிலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மேற்படி நிலையத்தால் இன்று விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி தென்மாகாணத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், வடமேல் மாகாணத்தில் 3 ஆயிரத்து 500 இற்கு மேற்பட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மீட்பு பணிகளில்; முப்படையினரும் ஈடுபட்டுவருகின்றனர். சீரற்ற காலநிலை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என வளிமண்ளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading