Local

அரசியல் பரபரப்பு உச்சகட்டம் – பௌத்த பீடங்களும் அவசர தலையீடு!

உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி பிரதமர் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு, அஸ்கிரிய, மல்வத்த பீடங்கள், சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு ஆலோசனை கூறியுள்ளன.

சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களைச் சந்தித்து நாட்டின் நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடினார்.

இதன்போது இரண்டு பீடங்களினதும் மகாநாயக்கர்கள், “யார் பிரதமர் என்பது பிரச்சினையல்ல, ஆனால் பிரதமர் நியமனம், சட்டபூர்வமானதாக- அரசியலமைப்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமரும், ஏற்கனவே பதவியில் உள்ள பிரதமரும் தமது பக்க நியாயங்களைக் கூறிக் கொண்டிருக்கின்றனரே தவிர, பிரச்சினைக்குத் தீர்வு காணும் சூழலை ஏற்படுத்தவில்லை.

இதனால் நிலைமைகள் உக்கிரமடையக் கூடும், எனவே உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி பிரதமர் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு, ஆலோசனை கூறியுள்ளனர்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading