Sports

ஆசியா வலைப்பந்தாட்டப் போட்டி: இரு தமிழிச்சிகளின் சாதனையால் வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது இலங்கை அணி!

ஆசியா வலைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி மகத்தான சாதனை படைத்து வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

இதற்குக் காரணமானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு தமிழிச்சிகள் என்பதால் (தர்ஜினி, எழிலேந்தினி) தமிழ் பேசும் மக்கள் மிகுந்த பெருமை கொள்கின்றார்கள்.

தமிழர் மண்ணிலே தர்ஜினி, எழிலேந்தினி போல் ஏராளம் ஏராளம் வீரவீராங்கனைகள் இருக்கின்றார்கள். ஆனால், அவர்களையெல்லாம் தென்னிலங்கை கண்டுகொள்வதில்லை.

இனத்துவ விகிதாசார அடிப்படையில்கூட தமிழ் வீரர்களுக்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை. அவர்கள் தமிழர் என்ற ஒரேயொரு காரணம்தான் இந்நிலைக்குக் காரணம்.

ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் இனவாதத்தைத் தூக்கியெறிந்துவிட்டு வெளியே வந்தால் தர்ஜினி போல், எழிலேந்தினி போல் ஆயிரமாயிரம் வீர வீராங்கனைகள் தமிழர் மண்ணிலே தெரிவார்கள்! நாடு எந்தளவுக்கு முன்னேறும் என்பதை ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் அதன்பின்னர் பார்க்கலாம்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading