Skip to content
Puthusudar

  • E-Paper
  • Local
    • North
    • East
    • Up Country
  • World
  • Sports
  • Features
  • Business
  • Gossip
  • Cinema
  • Jobs
  • ADVT
  • contact us
LocalUp Country

கண்டி மண்ணில் மீண்டும் ‘ரவுடி அரசியல்’! நாசகார கும்பலுக்கு சமாதி கட்டுவோம்!!

November 13, 2018 Editor
“ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் வகையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி – அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்ட தரப்பு, கண்டிமாவட்டத்தில் மீண்டும் அடாவடி அரசியலில் இறங்கியுள்ளது.” என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், முன்னாள் எம்.பியுமான வேலு குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, கண்டி மாவட்டத்தில் வாழும் தமிழ்பேசும் மக்கள் தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகவும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.
நல்லாட்சியின் கீழ் கண்டி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித்திட்டங்களின் போது காட்சிப்படுத்தப்பட்ட ‘கட்டவுட்’கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளமையை வன்மையாகக் கண்டித்து வேலுகுமார் எம்.பியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
“ மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தின்போது, கண்டிமாவட்டத்தில் தமிழ்பேசும் மக்கள் வாழும் பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்வதற்காக சில இனவாத அரசியல்வாதிகள் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டனர். இதனால், மாற்று அரசியலை அவர்கள் அனுமதிக்கவில்லை. மாற்றத்தைக்கோருவோரும் அடித்து விரட்டப்பட்டனர். இத்தகைய அரசியல் ரவுடிகளுக்கு, பிறப்பால் மட்டும் தம்மை தமிழர் என காட்டிக்கொள்பவர்களும் துணைநின்றனர்.
அற்பசொற்ப சலுகைகளுக்காக தமிழர்களின் தலைவிதியை அரசியல் ரவுடிகளிடம் அடகுவைத்து – தமிழர்களை அரசியல் அநாதைகளாக்கினர். இந்நிலைமையை மாற்றியமைத்து தமிழர்கள் கண்டி மண்ணிலும் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காக – மக்கள் ஆணைகோரி மனோ கணேசன் களமிறங்கினார். ஆனால்,  அரசியல் சூழ்ச்சிமூலம் அவர் தோற்கடிக்கப்பட்டார்.
அதன்பின்னர்  நிலைமைமேலும் மோசமடைந்தது. அடக்குமுறை தலைவிரித்தாடியதால் தமிழர்களும் விழித்துக்கொண்டனர். தமிழ்ப் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாலேயே தலைவர் மனோ கணேசன் வழிவந்த என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்தனர். பின்வரிசை எம்.பியாக இருந்தபோதிலும் உரிமைகளுக்காக போராடினேன். என்னால் முடிந்த அளவு மட்டுமின்றி அதற்கு அப்பால் சென்றும் சேவையாற்றியுள்ளேன்.
அடுத்துவரும் ஆண்டுகளில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருந்தன. அதற்குகள் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டார். பதவிக்காக  அலைபவர்கள் ஓடிச்சென்று அமைச்சுகளையும் பெற்றுக்கொண்டனர். அது அவர்களின் அரசியல் கொள்கையாக இருக்கலாம். அதில் தலையிட நாம் விரும்பவில்லை.
ஆனால், எம்மை அடக்கி ஆளும் அரசியலை அனுமதிக்க முடியாது.  குறுக்கு வழியில் அதிகாரம் வந்தகையோடு அடாவடி அரசியலில் ஈடுபடும் இவர்களுக்கு, மக்கள் ஆணை கிடைத்தால் என்ன நடக்கும்? எனவே, கண்டிமாவட்டத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் இந்நிலைமையை உணரவேண்டும். வார்த்தை ஜாலம்காட்டி வாக்குகளை அபகரிக்கமுற்படலாம். இருந்தாலும் அபாய பொறிக்குள் நாம் விழுந்துவிடக்கூடாது.
நல்லாட்சியின் கீழ்  முன்னெடுக்கப்பட்ட  அபிவிருத்தித் திட்டங்களை திசைதிருப்பும் வகையில் கட்டவுட்களை அடித்து நொறுக்கும் இவர்கள், ஜனநாயகத்தையும், மக்கள் உரிமைகளையும் எவ்வாறு பாதுகாப்பார்கள்? போட்டி அரசியல் என்பது இருக்கவேண்டும். ஆனால், பழிவாங்கல் அரசியல் என்பது ஜனநாயகத்துக்கு முரணான செயலாகும் – என்று அவ்வறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.
ReplyReply allForward

Share this:

  • Share on X (Opens in new window) X
  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Print (Opens in new window) Print
  • Email a link to a friend (Opens in new window) Email

Related

  • எதேச்சாதிகாரியான மஹிந்தவை பிரதமராக்கும் முயற்சிக்காக நாடாளுமன்றத்தைக் கலைப்பதா? – மைத்திரி மீது சீறிப் பாய்கின்றார் சமந்தா
  • புதிய கட்சிகளை அரவணைத்துக்கொண்டு தேர்தலில் களமிறங்கவுள்ளது கூட்டமைப்பு!

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

Epaper

PUTHUSUDAR E-PAPER
E-Paper

PUTHUSUDAR E-PAPER

November 17, 2025 Editor

PUTHUSUDAR E-PAPER

Share this:

  • Share on X (Opens in new window) X
  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Print (Opens in new window) Print
  • Email a link to a friend (Opens in new window) Email

Gossip

தனது விந்தணுவில் குழந்தை…. பல சலுகை; இளம் பெண்களை அழைக்கும் உலகப் பிரபலம்!
Gossip

தனது விந்தணுவில் குழந்தை…. பல சலுகை; இளம் பெண்களை அழைக்கும் உலகப் பிரபலம்!

December 26, 2025 Editor

37 வயதிற்கு உட்பட்ட பெண்கள் தனது விந்தணு தானம் பெற்று குழந்தை பெற்றுக் கொண்டால், அவர்களின் பிரசவ செலவை ஏற்றுக்கொள்வதுடன் தனது சொத்திலும் பங்கு உண்டு என

Share this:

  • Share on X (Opens in new window) X
  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Print (Opens in new window) Print
  • Email a link to a friend (Opens in new window) Email
திருமணத்திற்கு மறுப்பு; அண்ணியாரின் செயலால் அதிர்ந்த குடும்பம்!
Gossip

திருமணத்திற்கு மறுப்பு; அண்ணியாரின் செயலால் அதிர்ந்த குடும்பம்!

October 22, 2025 Editor
3 குழந்தைகளுக்கு தந்தையானவருடன் 2-வது திருமணம்.. நடிகையின் மறுபக்கம்?
Gossip

3 குழந்தைகளுக்கு தந்தையானவருடன் 2-வது திருமணம்.. நடிகையின் மறுபக்கம்?

October 15, 2025 Editor
கணவனின் Whats App-ல் மனைவியின் நிர்வாண படம்; அதிர்ந்த பொலிஸார்!
Gossip

கணவனின் Whats App-ல் மனைவியின் நிர்வாண படம்; அதிர்ந்த பொலிஸார்!

October 13, 2025 Editor
குடும்ப பிரச்சனையில் கணவரின் நாக்கை கடித்து விழுங்கிய மனைவி
Gossip

குடும்ப பிரச்சனையில் கணவரின் நாக்கை கடித்து விழுங்கிய மனைவி

July 25, 2025 Editor
உலகம் முழுவதும் ஒரே நாளில் பிரபலமான கள்ளக்காதல் ஜோடி.. .?
Gossip

உலகம் முழுவதும் ஒரே நாளில் பிரபலமான கள்ளக்காதல் ஜோடி.. .?

July 19, 2025 Editor

Business

உலகில் மிகவும் விலை உயர்ந்த உப்பு!
BusinessLocal

உலகில் மிகவும் விலை உயர்ந்த உப்பு!

January 28, 2025 Editor

உலகில் மிகவும் விலை உயர்ந்த உப்பு குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். உணவிற்குச் சுவை கூட்ட உப்பு பயன்படுகிறது.வெள்ளை உப்பு நமது உணவில் அயோடினை சேர்ப்பதற்கான ஆதாரமாக

Share this:

  • Share on X (Opens in new window) X
  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Print (Opens in new window) Print
  • Email a link to a friend (Opens in new window) Email
USAID மற்றும் IREX ஏற்பாட்டில் MoJo Lanka வின் முதலாவது மொபைல் ஊடகவியல் விழா!
BusinessLocal

USAID மற்றும் IREX ஏற்பாட்டில் MoJo Lanka வின் முதலாவது மொபைல் ஊடகவியல் விழா!

June 7, 2023 Editor
DFCC Agile Design Thinking Awards 2023 நிகழ்வு!
Business

DFCC Agile Design Thinking Awards 2023 நிகழ்வு!

May 16, 2023 Editor
அலியான்ஸ் லங்கா, நவலோக வைத்தியசாலை குழுமத்திற்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!
Business

அலியான்ஸ் லங்கா, நவலோக வைத்தியசாலை குழுமத்திற்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!

May 16, 2023 Editor
Uber வாடிக்கையாளர்கள் தவறுதலாக விட்டுச் செல்லப்பட்ட பொருட்களின் விபரங்கள்!
Business

Uber வாடிக்கையாளர்கள் தவறுதலாக விட்டுச் செல்லப்பட்ட பொருட்களின் விபரங்கள்!

May 16, 2023 Editor

Jobs

 Unity Plaza வில் புதிய உயர் ரக காட்சியறையை திறந்த Creative Information Technologies
Jobs

 Unity Plaza வில் புதிய உயர் ரக காட்சியறையை திறந்த Creative Information Technologies

May 29, 2026 Editor

                                       

Share this:

  • Share on X (Opens in new window) X
  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Print (Opens in new window) Print
  • Email a link to a friend (Opens in new window) Email
INCOHST 2026 ஊடாக தொடர்ந்து புத்தாக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் NCHS
Jobs

INCOHST 2026 ஊடாக தொடர்ந்து புத்தாக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் NCHS

May 27, 2026 Editor
அறிமுகமற்றவர்களாக இணைகின்றவர்கள், இறுதியில் நண்பர்களாக மாறுகின்றனர் – SLIIT ல் நட்பின் வரலாறு மகத்துவமானது   
Jobs

அறிமுகமற்றவர்களாக இணைகின்றவர்கள், இறுதியில் நண்பர்களாக மாறுகின்றனர் – SLIIT ல் நட்பின் வரலாறு மகத்துவமானது  

May 27, 2026 Editor

About Us

Puthusudar
www.puthusudar.lk
Copyright © 2026 Puthusudar. All rights reserved.
Theme: ColorMag by ThemeGrill. Powered by WordPress.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Loading Comments...

You must be logged in to post a comment.