Local

கொழும்பு நாய்கள் திடீரென மாயம்!

கொழும்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டாகாலி நாய்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது என மாநகரசபையின் பிரதான மிருகவைத்திய அதிகாரி விபுல தர்மவர்தன தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுடன் தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வினை ஒப்பீடுசெய்கையிலேயே இவ்வீழ்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் பல பகுதிகளிலும் கட்டாகாலி நாய்கள் தொடர்பாக கடந்த காலங்களில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து கட்டாகாலி நாய்களை பிறபகுதிகளுக்கு கொண்டுசெல்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டன.

திடீரென பல நாய்கள் மாயமாகின. கட்டாகாலி நாய்கள் இறைச்சிக்காக பயன்படுத்தப்படுவதாகவும் வதந்திகள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading