Features

தீராத தலைவலிக்கு இதுவும் ஒரு வைத்தியம்!!

அதிகமான வேலைப்பளு, டென்ஷன், தீராத மன அழுத்தம், தலைக்குக் குளித்துவிட்டு சரியாகத் துவட்டாமல் அப்படியே ஈரத்தோடு போவது, அதனால் தலையில் நீர் கோர்ப்பது போன்ற காரணங்களால் தான் பெரும்பாலும் தலைவலி உண்டாகின்றது. இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்து இருந்தால் அது நாளடைவில் அடிக்கடி தலைவலி உண்டாக்கும். மைக்ரேன் ஒன்னும் ஒற்றை் தலைவலியாகக் கூட மாறும்.

என்ன செய்யலாம்?

பொதுவாக தலைவலி என்றாலே எல்லோரும் செய்வது சூடாக ஒரு காபி குடித்துவிட்டு நன்கு ஓய்வு எடுப்பது தான். அதையும் தாண்டி தலைவலி ஏற்படுகிற போது வலி நிவாரணியையோ மாத்திரைகளையோ நாடுவோம்.

ஆனால் அவை தற்காலிகத் தீர்வைத் தான் கொடுக்குமே ஒழிய நிரந்தரமாகப் போகாது. ஆனால் இதுவே நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறையில் முன்னோர்கள் சொன்னபடி வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தினால் நிரந்தரமான தீர்வு காணலாம். அப்படி தலைவலிக்கு என்னென்ன தீர்வு நம் வீட்டு அடுப்பங்கரையிலே இருக்கிறது என்று பார்க்கலாம்.

தலைவலிக்கு மருந்து எடுத்துக் கொள்வதென்றால், அலோபதியை விட நம்முடைய முன்னோர்கள் இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி தலைவலியை குணப்படுத்தியிருக்கின்றனர்.

 

முள்ளங்கி

முள்ளங்கி நீர்ச்சத்து மிகுந்த பொட்டாசியம் நிறைந்த காய்கறிகளில் ஒன்று. ஒரு முள்ளங்கியை எடுத்து சாறு பிழிந்து அந்த ஜூஸைத் தொடர்ந்து குடித்து வாருங்கள். தீராத தலைவலியும் தீர்ந்து போகும்.

 

காபி தூள்

ஒரு லிட்டர் அளவுக்கு நன்கு தண்ணீரை கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் இறக்கி ஒரு மூடி போட்டு ஆவி வெளியே வராமல் மூடி வையுங்கள். அதற்கிடையில் காபி பொடி டப்பா, பெட்ஷீட் ஆகியவற்றைக் கொண்டு வந்து அருகில் வைத்துக் கொண்டு அமர்ந்து மெதுவாக அந்த மூடியைத் திறந்து மூன்று ஸ்பூன் காபி பொடியைப் போடுங்கள். பெட்ஷீட் போட்டு மூடி 20 நிமிடங்கள் வரையிலும் ஆவி பிடியுங்கள். வேறு எதுவும் அதற்குள் போட வேண்டிய தேவையே இல்லை. தலைவலி இருக்கிற இடம் தெரியாமல் பறந்து போய்விடும்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading