Local

‘மெகா’ கூட்டணி அமைத்து களமிறங்குவோம் – மஹிந்த அறிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியன கூட்டாக இணைத்து – சிறுகட்சிகளின் ஆதரவுடன் பாரிய கூட்டணி அமைத்தே பொதுத்தேர்தலை எதிர்கொள்வோம் – என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ச நேற்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளைச்சந்தித்தார்.இதன்போது கலந்துரையாடுகையிலேயே மஹிந்த மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (12) மாளிகாவத்தையில் உள்ள ஜம்மியத்துல் உலமா செயலகத்தில் இடம்பெற்றது.

அமைச்சர் பைசர் முஸ்தபா, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தேசிய சுதந்திர முன்னணி அமைப்பாளர் மொஹமட் முசம்மில் மற்றும் பொதுஜன பெரமுன முஸ்லிம் தலைவர்கள் உட்பட பல உலாமாக்களும் இதில் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, அவர்களுடன் தொடர்ந்தும் ஒத்துழைப்போடும், ஒற்றுமையோடும் வாழக்கூடிய சூழ்நிலையைக் கட்டியெழுப்பப் போவதாக பிரதம மந்திரி உறுதியளித்தார்.

அதேவேளை, முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading