World

அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் அல்லது வசிக்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்பு கடுமையான ஆபத்தில் இருக்கக்கூடும் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் “உலகளாவிய எச்சரிக்கையை” வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்களின் விளைவாக மத்திய கிழக்கு வழியாக பயணம் தடைபட்டுள்ளதாகவும், வான்வெளி அவ்வப்போது மூடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க பிரஜைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இராஜாங்க திணைக்களம் அறிவுறுத்தியுள்ளதோடு, அமெரிக்கர்களுக்கு எதிராக போராட்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading