அமெரிக்காவின் அதிர்ச்சி முடிவு: உக்ரைனுக்கான ஆயுத உதவி நிறுத்தம்!
ரஷ்யா உடனான போரில் உக்ரைனுக்கான ஆயுத உதவியை அமெரிக்கா அதிரடியாக நிறுத்தியுள்ளது.
2022 பிப்ரவரி முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர், உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இது உக்ரைன் போரில் பெரும் திருப்பமாக கருதப்படுகிறது. இருப்பினும், பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல் காரணமாக, உக்ரைனுக்கான ஆயுத உதவிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கா கைவிட்ட நிலையில், ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகின்றன.
பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அத்துடன் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ வீரர்கள் அடங்கிய அமைதிப் படையை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

You must be logged in to post a comment.