அமெரிக்கா – ஈரான் படைகள் மோதல்!!
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரானிய ஏவுகணைப் பிரிவினர் “எதிரிப் படைகள்” மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அந்நாட்டு இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈரானிய எண்ணெய் எரியூட்டி கப்பல் (Tanker) ஒன்றின் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இந்த அதிரடித் தாக்குதலில் அமெரிக்கக் கப்பல்கள் சேதமடைந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் அந்தப் பகுதியை விட்டுப் பின்வாங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தால் பாரசீக வளைகுடாப் பகுதியில் பெரும் போர் பதற்றம் நிலவுகிறது.

You must be logged in to post a comment.