Local

அரசியல் நெருக்கடிக்குப் பின்புலத்தில் சம்பந்தனும் மேற்குலக நாடுகளும்!! – இப்படிக் குற்றம்சாட்டுகின்றது மஹிந்த அணி

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி நிலைமைகளுக்குப் பின்னால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் மேற்குலக நாடுகளுமே இருப்பதாக மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்த நெருக்கடி நிலைமையைச் சாதகமாக்கிக்கொண்டு சமஷ்டி ஆட்சிமுறையைக் கொண்டுவருவதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading