Cinema

ஆப்கான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்ய மறுத்த இந்தி நடிகை!

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றி உள்ளதால் கிரிக்கெட் வீரருடன் நடக்க இருந்த திருமணத்தை பிரபல நடிகை அர்ஷிகான் ரத்து செய்துள்ளார்.

இந்தி நடிகை அர்ஷிகான். இவர் தமிழில் மல்லி மிஷ்து என்ற படத்தில் நடித்துள்ளார். வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். மேலும், தொலைக்காட்சி தொடர்கள், இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார். அர்ஷிகானுக்கும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றி உள்ளதால் திருமணத்தை அர்ஷிகான் ரத்து செய்துள்ளார். இதுகுறித்து அர்ஷிகான் கூறும்போது, “ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருடன் அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. தற்போது தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி இருப்பதால் திருமணத்தை நிறுத்திவிட்டோம். எனக்கு கணவராக வர இருந்தவரிடம் இனிமேல் நண்பர்களாக இருக்கலாம் என்று கூறிவிட்டேன். எனது பெற்றோர் எனக்கு இந்திய மாப்பிள்ளையை பார்ப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading