Local

இணையத்தளம் ஊடாக கடன் வாங்க வேண்டாம் – பாதிக்கப்பட்டோர் சங்கம் வேண்டுகோள்

சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் இணையத்தள முறைகள் மூலம் அதிக வட்டிக்கு எவ்வித சட்ட கட்டமைப்பும் இன்றி பணம் வழங்கும் நிறுவனங்களினால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இணையத்தள முறைகள் மூலம் நிதி மோசடிகளினால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கம் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலையில், இணையத்தள முறைகள் மூலம் உடனடியாக கடன் வழங்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து தற்போது பேசப்படுகிறது.

இவ்வாறான நிறுவனங்களில் கடன் பெற்ற சிலர் தாம் எதிர்கொண்ட அசௌகரியங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையிலே, சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் இணையத்தள முறைகள் மூலம் கடன் பெற்று அசௌகரியங்களுக்கு உள்ளானவர்கள் ஒன்றிணைந்து இணைய நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களின் சங்கம் என்பதனை உருவாக்கியுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading