Local

இராணுவ வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

தம்புள்ளை பேருந்து நிலையத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
தம்புள்ளை பேருந்து நிலையத்தின் கழிப்பறைக்கு முன்னால் இராணுவ சிப்பாய் விழுந்து கிடந்துள்ளார்.

அதன் பின்னர் பிரதேச மக்கள் சிலர் இணைந்து முச்சக்கர வண்டியில் ஏற்றி தம்புள்ளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கலேவெல, பல்லேபொல பிரதேசத்தை சேர்ந்த துஷார குமார ஜயசிங்க என கூறப்படுகின்றது.
தம்புள்ளை பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கழிப்பறைக்கு சென்ற இராணுவ சிப்பாய் தனது பயணப் பையை கழிப்பறைக்கு வெளியே வைத்து சென்றுள்ளார். வெளியே வந்த அவர் கழிப்பறைக்கு பணம் வழங்கும் திடீரென சிப்பாய் கீழே விழுந்துள்ளார்.

பார்ப்பதற்கு இராணுவ சிப்பாய் போன்று இருந்ததனை அறிந்துக் கொண்ட மக்கள், அரை மணி நேரம் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டும் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல யாரும் முயற்சிக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
அவ்விடத்தில் சில இராணுவ சிப்பாய்கள் இருந்தும் அவரை காப்பாற்ற ஒருவரும் முன்வராத நிலையில், இளைஞர் மற்றும் யுவதிகள் சிலர் இணைந்து இராணுவ சிப்பாயை முச்சக்கர வண்டியில் ஏற்றியுள்ளனர்.
எனினும் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading