Local

இலங்கையில் உணவின் தரம் தொடர்பில் வௌியான ஆய்வு முடிவு

உணவின் தரத்தை பரிசோதிப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு பரிசோதனையையும் இலங்கையால் மேற்கொள்ள முடியவில்லை என பேராசிரியர் கமல் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​தலசீமியா மற்றும் சிறுநீரக நோயின் தாக்கம் இந்நாட்டிலும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் 15-17 வயதுக்கு இடைப்பட்ட 100 பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட பரிசோதனையின் போது தலசீமியா 23.9% ஆகவும் குருநாகலில் 20.6% ஆகவும் காணப்பட்டதாக பேராசிரியர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading