Local

இலங்கையில் ஏற்படவுள்ள அதிகார மாற்றம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உலகளாவிய அதிகார போராட்டம் எதிர்காலத்தில் இலங்கையில் அதிகார மாற்றத்திற்கு வழிவகுக்க கூடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் அதிகாரப் போராட்டத்தின் ஆபத்தான காலகட்டத்தில் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமை பலவீனமான பொருளாதாரத்தை கொண்ட இலங்கையின் மீது கடுமையான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார தாக்கம்

புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றின் போது உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலைக் கண்டிப்பதில் நான் ஈரானுடன் நிற்கிறேன்.

இலங்கையில் ஏற்படவுள்ள அதிகார மாற்றம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Global Power Struggle Ranil Warned

அணுசக்தி தொடர்பாக ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஈரான் இலங்கைக்கும் உதவிய நேரத்தில் தற்போதைய அரசாங்கம் முன்வராமை என்பது வருந்தத்தக்கது. உலகில் அணுசக்தி மற்றும் பொருளாதார சக்தியின் ஆதிக்கம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிடம் இழக்கப்படுகிறது.

இது ஆசிய நாடுகளில் ஒன்றாக மாறி வருகிறது. ரஷ்யாவும் சீனாவும் தற்போது ஒரு சக்தியாக உயர்ந்து வருகின்றன. அந்த சக்தி அமெரிக்காவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் ஒரு பிரச்சனையாகும். சர்வதேச பரிவர்த்தனைகளை தீர்ப்பதற்கான நாணயமாக சீன நாணயம் உருவெடுத்துள்ளது.

சர்வதேச பரிவர்த்தனை

பிரிக்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே அதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. எதிர்காலத்தில் சர்வதேச பரிவர்த்தனைகளை தீர்ப்பதில் நம் நாடும் பயன்படுத்தக்கூடிய நாணயம் இதுவாகும். இந்த நேரத்தில், இந்தியாவை மறந்துவிடுவது நல்லதல்ல.

இலங்கையில் ஏற்படவுள்ள அதிகார மாற்றம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Global Power Struggle Ranil Warned

நான்கு டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணி இருப்பு வைத்திருக்கும் இந்தியாவுடன் நாம் இணைந்து பயணிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading