Local

இலங்கையில் ஒரு மகனுக்காக உரிமை கோரும் இரு தாய்மார்!

சுனாமியில் காணாமல் போன ஒருவக்கு இரு தாய்மார்கள் உரிமை கோரும் வழக்கு நேற்று (8) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மரபணு பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதுடன், வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது மகனுக்காக ஏங்கும் இரு தாய்மார்களும் நீதிமன்றத்துக்கு வருகை தந்ததுடன் தாய்மாரின் கோரிக்கையை ஏற்று மரபணு பரிசோதனையை (DNA) நேற்று (08) மேற்கொள்வதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு மரபணு பரிசோதனை தொடர்பில் பின்னர் அறிவிப்பதாக தெரிவித்த சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி, வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading