Local

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த ஒன்பதாவது நபர் பற்றிய தகவல்

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த 9 ஆவது நபரான கொழும்பு 15 ஐ சேர்ந்த பெண் சுமார் ஒரு மாதகாலமாக சுகயீனமுற்ற நிலையில் காணப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த பெண்ணின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கு அமைய குறித்த பெண்ணிற்கு கொரோனா தொற்று காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டமையை தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கொடையில் அமைந்துள்ள IDH வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் தொற்றுறுதி செய்யப்பட்ட பெண் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading