Local

இலங்கையில் தனக்கு கொடுத்த கெளரவம் உலகில் எங்கும் கிடைக்கவில்லை

கொழும்பு கம்பன் கழகம் வருடந்தோறும் பிரமாண்டமான வகையில் நடத்தும் கம்பன் விழா இம்முறையும் ஐந்து நாள் நிகழ்வாக வெகு சிறப்பாக நடைபெற்றது.

உள்நாட்டு வெளிநாட்டு அறிஞர்கள் பல்துறை சார்ந்த சான்றோர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டதுடன் அத்தகையச் சான்றோர்களுக்கான கௌரவமும் விருதும் பொற்கிழியும் வழங்கி கம்பன் விழா அவர்களை சிறப்பித்தது.

அந்த வகையில் தமிழ்நாட்டின் பிரபல பின்னணிப் பாடகர் பத்மசிறி எஸ். பி. பாலசுப்பிரமணியம் இந்த விழாவில் சிறப்பு கம்பன் புகழ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அவருக்கான கௌரவத்தை பெற்றுக்கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

அதன்போது இலங்கையில் தமக்கு கிடைத்த இந்த மாபெரும் மரியாதைக்கு தாம் தலை வணங்குவதாகவும்  இலங்கையில் தமக்குக் கிடைத்த ஆசீர்வாதமும் இத்தகைய கௌரவமும் உலகில் வேறு எங்கும் தனக்குக் கிடைக்கவில்லை என  தெரிவித்தார்.நிகழ்வில் விருது,கௌரவத்தைப் பெற்றுக் கொண்டு அவர் உரையாற்றியபோது.

தாய் தமிழுக்கும் நான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இக்காலத்தில் என்னோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற எனது அன்பு மக்களுக்கும் எனது அன்பான வணக்கம்.

உங்களோடு வாழ்வதற்கு எனக்கு அங்கீகாரம் கொடுத்து இருக்கிறீர்கள் அதுவே பெரும் வரப்பிரசாதம். கம்பன் கழகத்தின் மூலம் எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஆசீர்வாதமும் விருதும் இதுவரை எனக்கு எங்கும் கிடைக்கவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading