Local

இலங்கையில் நடந்த அபூர்வ சத்திர சிகிச்சையில் உயிர் பிழைத்த பெண்!

மூளையில் ஏற்பட்ட கட்டியினால் நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்ட 44 வயது பெண்ணுக்கு அபூர்வ சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று பதுளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அபூர்வ சத்திரசிகிச்சை மூலம் மூளை கட்டி அகற்றப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பதுளை வைத்தியசாலையில் சத்திர சிக்சைக்குட்படுத்தப்பட்ட பெண் முழுமையாக மயக்கமடைய செய்யாமல் அவருடன் உரையாடிக்கொண்டே சித்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சத்திர சிகிச்சை பதுளை வைத்தியசாலையின் நரம்பியல் வைத்தியர் லக்மால் ஹேவாவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த பெண்ணுக்கே பதுளை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற போது அவரது தலையில் 3 – 4 சென்றிமீற்றர் அளவு பெரிய கட்டி ஒன்று வளர்ந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக இந்த கட்டிக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலைமை காணப்பட்டுள்ளது. 4 மணித்தியாலங்கள் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது நோயாளி மிகவும் ஆரோக்கியமான உடல் நிலையில் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சத்திரசிகிச்சை இலங்கையில் இடம்பெற்ற இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதற்கு முன்னர் அநுராதபுரம் வைத்தியசாலையில் நோயாளியை முழுமையாக மயக்கமடைய செய்யாமல் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading