இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!!
கடந்த 20 ஆண்டுகளில் இலங்கையில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளமை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
சுகாதாரத் திணைக்களம் இது தொடர்பான இலங்கை தேசிய புற்றுநோய் பதிவேட்டின் தரவுகளை வெளியிட்டுள்ளது. குறித்த தரவுகளின் பிரகாரம், 2022 ஆம் ஆண்டில் நாட்டில் 35,855 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்..
இந்தத் தரவுகளின்படி, சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 99 புதிய புற்றுநோயாளிகள் பதிவாகின்றனர். அதன் காரணமாக இலங்கையில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளமை தெரிய வந்துள்ளது.

You must be logged in to post a comment.