Local

இலங்கையை உடனடியாக முடக்குங்கள்!

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் நாடு உடனடியாக முடக்கப்பட வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா பரவல் விரைவாக அதிகரித்து வரும் நிலையில் பூட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

இல்லயெனில், எதிர்காலத்தில் நாடு பெரும் ஆபத்தில் சிக்கிக்கொல்ள்ளும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா கொத்தணிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சீரற்ற பி.சி.ஆர் சோதனைகளில் சுமார் 30% தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.
உடனடியாக நாட்டைப் முடக்கப்பட வேண்டும், துணைக் கொத்துக்களைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading