ஈரான் அதிரடி தாக்குதல்! இஸ்ரேல் முறைப்பாடு!!
இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள டிமோனா (Dimona) அணுசக்தி ஆராய்ச்சி மையத்திற்கு மிக அருகாமையில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. டிமோனா மற்றும் ஆராட் (Arad) ஆகிய நகரங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், இதுவரை சுமார் 180 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தி பீதியை உருவாக்குவது சர்வதேச சட்டங்களை மீறும் போர்க்குற்றம் என இஸ்ரேலிய அதிகாரிகள் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறையிட்டுள்ளனர்.

You must be logged in to post a comment.