Local

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : காற்றில் பறந்த அநுரவின் உறுதிமொழி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்(easter attack) சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகளை பிடிப்போம் என கத்தோலிக்க மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (anura kumara dissanayake)உறுதியளித்த போதிலும் அந்த வாக்குறுதியை அவர் மறந்து விட்டார் என சிறிலங்கா பொதுஜன பெரமுண கிண்டலடித்துள்ளது.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே சாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அநுர வழங்கிய உறுதிமொழி

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் கண்டறியப்படுவார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய உறுதிமொழி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : காற்றில் பறந்த அநுரவின் உறுதிமொழி : கிண்டலடிக்கும் மொட்டு | Easter Sunday Attack Anura Forgot His Promise

பிரதான சூத்திரதாரி தமது கட்சியின் தேசியப் பட்டியலில் இருந்ததை அவர் மறைத்தார். அதேபோல பேராயரையும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தவறாக வழிநடத்தினார்கள்.

பேராயரும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் கடந்துள்ளன. ஆனால் இது தொடர்பில் இன்னும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : காற்றில் பறந்த அநுரவின் உறுதிமொழி : கிண்டலடிக்கும் மொட்டு | Easter Sunday Attack Anura Forgot His Promise

எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகின்றோம். பேராயரும் இது விடயத்தில் தலையிட்டு உரிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். ஏனெனில் பிரதான சூத்திரதாரிகள் மறைக்கப்படுகின்றனரா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. ”என தெரிவித்தார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading