ஏப்ரலில் இலங்கை வரும் இந்திய பிரதமர்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் சில நாட்களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இன்று (15) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்திய பிரதமரின் குறித்த இலங்கை விஜயத்தின் போது பல புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

You must be logged in to post a comment.