கொழும்பு மெகசின் சிறையில் மோதல்
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உள்ள ஐந்து கைதிகளுக்கு இடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இன்று (10) பிற்பகல் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதுடன், மோதலில் காயமடைந்த இரண்டு கைதிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

You must be logged in to post a comment.