சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு வாய்ப்பு!!!
எதிர்காலத்தில் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான போக்கு காணப்படுவதாக அந்நாட்டு அரசாங்க அறிக்கைகளை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8 முதல் 9 ஆக பதிவாகலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு 80% என்று ஜப்பானிய அரசு அறிக்கைகள் மேலும் தெரிவித்துள்ளன.
நிலநடுக்கத்தால் சுமார் 300,000 உயிர்கள் பலியாக இருக்கலாம் என்றும் தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் பசிபிக் கடலோரப் பகுதியிலும் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டால் ஜப்பானில் சுனாமி ஏற்பட்டு நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய அறிக்கைகளின்படி, நிலநடுக்கத்தால் ஜப்பானின் பொருளாதாரம் சுமார் 1.81 டிரில்லியன் டாலர்களை இழக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

You must be logged in to post a comment.