ட்ரம்பால் ரஷ்யாவுக்குள் சிக்கிக்கொண்ட 10,000 உக்ரைன் வீரர்கள்
ரஷ்யாவில் புகுந்து சண்டையிட்டுவரும் சுமார் 10,000 உக்ரேனிய வீரர்கள், ரஷ்ய ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் அதிரடியாக நுழைந்து தாக்குதல் முன்னெடுத்துள்ள உக்ரைன் படைகள், தற்போது டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கையால் அங்கிருந்து தப்ப முடியாத நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

மட்டுமின்றி, இதுவரை கைப்பற்றப்பட்ட பகுதிகளும் கைவிட்டுப் போகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. உக்ரேனியப் படைகள் குர்ஸ்கில் இருந்து பின்வாங்கி எல்லை நோக்கி வெளியேறுவது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரஷ்யா தென்கிழக்கில் வெற்றி பெற்று உக்ரைன் படைகளின் விநியோகப் பாதைகளைத் தாக்கும்போது அவர்கள் சுற்றிவளைக்கப்படும் அபாயமும் இருப்பதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, குர்ஸ்க் பிராந்தியத்தில் சிக்கித் தவிக்கும் துருப்புக்கள் மிகவும் மேம்பட்ட ரஷ்ய ட்ரோன்களின் தாக்குதலையும், வட கொரிய படைகளின் காமிகேஸ் தாக்குதல்களையும் எதிர்கொள்கின்றனர்.


அமெரிக்காவின் உளவு உதவிகள் இல்லை என்றால் உக்ரைனால் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. மட்டுமின்றி, ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களையும் முறியடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

You must be logged in to post a comment.