World

ட்ரம்பின் மிரட்டல்: கனேடிய மக்கள் கொடுத்த பதிலடி!!

கனேடிய (Canada)மக்கள் இனி அமெரிக்காவுக்கு (US) சுற்றுலா செல்வதில்லை என முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கனடா மீது வரிகள் விதிக்கப்போவதாக மிரட்டியதைத் தொடர்ந்து, கனேடியர்கள் அமெரிக்காவைத் தவிர்த்து கனடாவுக்குள்ளேயே பல்வேறு சுற்றுலாத்தலங்களை பார்வையிடுவதில் கவனம் செலுத்துமாறு முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதைதொடர்ந்து பெப்ரவரியில் அமெரிக்கா சென்று திரும்பிய கனேடியர்களின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 23 சதவிகிதம் குறைந்துள்ளதாக கனடாவின் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

ட்ரம்பின் வரிவிதிப்பு அச்சுறுத்தல்களைவிட, கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக அவர் மிரட்டிவருவதுதான் தங்களுக்கு கோபத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கனேடிய மக்கள் தெரிவித்துள்ளனர்.

வரியை தாண்டிய ட்ரம்பின் மிரட்டல்: கனேடிய மக்கள் கொடுத்த பதிலடி | Canadians Decide Not To Travel To The Us

சமீக காலமாக அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வர்களும், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களும் கூட கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களுக்கு சிறையில் அடைக்கப்படுவதாக வெளியாகிவரும் செய்திகள் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் எண்ணத்தை தவிர்க்க கனேடியர்களைத் தூண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டுமே சுமார் 20.2 மில்லியன் முறை கனேடியர்கள் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

வரியை தாண்டிய ட்ரம்பின் மிரட்டல்: கனேடிய மக்கள் கொடுத்த பதிலடி | Canadians Decide Not To Travel To The Us

இந்நிலையில், அவர்களில் 10 சதவிகிதம் பேர் அமெரிக்கா செல்வதைத் தவிர்த்தாலே, அமெரிக்காவுக்கு சுமார் 2 பில்லியன் டொலர்கள் இழப்பும், 14,000 பேர் வேலையிழக்கும் நிலையும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading