World

தென் கொரிய விமான விபத்தில் 62 பேர் பலி!

தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் 181 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 62 பேர் உயிரிழந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது.

175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஜெஜு ஏர் (Jeju Air) விமானம் தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி சுவரில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை இரண்டு பேர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மற்றும் மீட்பு பணிகள் இன்னும் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading