Local

தேஷபந்து தென்னகோனின் சொத்துக்களை அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பம்

பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் சொத்துக்களை அடையாளங்காணும் மற்றும் பட்டியலிடும் நடவடிக்கைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்காக சில குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனை கைது செய்வதற்கான ஒன்றிணைந்த சுற்றிவளைப்புகள் பதில் பொலிஸ் மாஅதிபரின் நேரடி கண்காணிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைக்கு புலனாய்வு பிரிவின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளதாகவும், தேஷபந்து தென்னகோன் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருப்பதற்கு உதவுபவர்களும் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading