நெதன்யாகு பேச்சைக் கேட்டு ஏமாந்த டிரம்ப்!!
ஈரானியத் தலைவரைத் தாக்கினால் அந்த ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொடுத்த ஆலோசனையை நம்பியே ஜனாதிபதி டிரம்ப் போரைத் தொடங்கியதாகத் துருக்கிய ஊடகவியலாளர் யாஹ்யா போஸ்டன் தெரிவித்துள்ளார்.
ஆனால், போர் தொடங்கி மூன்று வாரங்கள் கடந்த பின்னரும் ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்பதுடன், அதுகுறித்த பேச்சுகளே தற்போது ஓய்ந்துவிட்டன. மாறாக, இந்தப் போர் தற்போது ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கும் நிலைக்குச் சென்றுள்ளது.
இதனால் உலகளாவிய எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜலசந்தியை மீண்டும் திறக்க சர்வதேச நாடுகளின் உதவியை டிரம்ப் தற்போது நாடி வருகிறார்.
நெதன்யாகுவின் ஆலோசனையை ஏற்றதற்காக டிரம்ப் இப்போது வருத்தப்படக்கூடும் என யாஹ்யா போஸ்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.

You must be logged in to post a comment.