பசிபிக் பெருங்கடலில் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள்..!!
பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் தீவிரமடைந்த 3 சூறாவளிகள்!
🇱🇰 இலங்கைக்கும் ஏற்பட்டுள்ள தாக்கம்?
பசிபிக் பெருங்கடலில் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள் உருவாகியுள்ளன. Lowell, Karina மற்றும் Marie ஆகிய சூறாவளிகள் ஒரே நேரத்தில் செயற்பாட்டில் இருப்பது அரிதான வானிலை நிகழ்வாகக் கருதப்படுகிறது.
🌊 இந்த சூறாவளி நிலைமையால் ஏற்பட்ட கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக ஹவாய் தீவுகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Hurricane Lowell ஹவாய் நோக்கி நகரும் நிலையில், அங்கு கடும் அலைகள் மற்றும் ஆபத்தான கடல் நிலைமை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🌡 எல் நினோ தாக்கம்
இதேவேளை, வலுவடைந்து வரும் எல் நினோ காலநிலை நிகழ்வு பசிபிக் கடல் வெப்பநிலையை அதிகரித்து, உலகின் பல பகுதிகளில் மாறுபட்ட தீவிர வானிலை நிலைமைகளை ஏற்படுத்தி வருகிறது. உலக வானிலை அமைப்பும் தற்போதைய எல் நினோ நிகழ்வு மிகவும் வலுவானதாக மாறக்கூடும் என எச்சரித்துள்ளது.
🇱🇰 இலங்கையில் கடும் வறட்சி!
எல் நினோ தாக்கத்துடன் தொடர்புடைய வறட்சி காரணமாக இலங்கையின் 7 மாவட்டங்களில் 35,149 குடும்பங்களைச் சேர்ந்த 115,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
💧 பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மொனராகலை மாவட்டமே அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பதிவாகியுள்ளது.
☀️ இன்று இலங்கையில் சூரியன் உச்சம்!
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7 வரை இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் காலம் இடம்பெறுகிறது.
📍 இன்று செப்டம்பர் 6ஆம் திகதி நண்பகல் 12:08 மணியளவில், பெந்தோட்டை, தினியாவல, இத்தக்கந்த, உடவலவை மற்றும் கதிர்காமம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
⚠️ பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, வானிலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களை தொடர்ந்து அவதானிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

You must be logged in to post a comment.